கதை சொல்லி

Wednesday, March 2, 2011

கோபம் விரோதியா? நண்பனா?

        ரௌத்திரம் பழகு என்றான் முண்டாசு கவிஞன் பாரதி, ஆனால் இன்று ரௌத்திரம் கொண்டவன் எல்லோரும் காயடிக்கப் படுகின்றான், 
கோபம் செல்லாவிடத்தில் தீது.
எனது தோழன் கொண்ட சமூக கோபத்தின் விளைவு 45 நாள் சிறை வாசம், அவன் கோபம் சரி ஆயினும் செயல் முறை தவறு.
சமுக கோபம் கொள்ள காரணம் நூறு உண்டு. அதை நிறைவேற்ற சரியான தருணம் தேவை, செயல் திட்டம் தேவை


” வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.” 

                                                  எனும்  வள்ளுவன் வாக்கின் படி கோபம் கொண்டவனுக்கு கோபம் நண்பன்,
“செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.”

                                                 எனும்  வள்ளுவன் வாக்கின் படி கோபம் கொண்டவனுக்கு கோபம் பகைவன்.


                                        - கதை சொல்லி...

0 comments:

Post a Comment