கதை சொல்லி

Friday, September 30, 2011

புணர்ச்சி விதிகள் 2

 நீண்ட இரவுகள், முடியாத கனவுகள், தொலைந்து போன வாலிபம்
அவளுக்கும் அப்படித்தானோ; மணவறையில் நான்.

உதட்டை பிதுக்கிய மகளுக்கு சொன்னால் அம்மா!
நிழல்களின் சாயலில் நிஜங்களின் பிம்பம்,
சில நேரங்களில் அப்படித்தான்.

அண்ணனுக்கு பெண் பார்க்கும் படலம்,
படியாத பேரம், அப்பாவுக்கு நன்றி,
எனக்கு மட்டும் பிடித்தது முக வாயில் அவள் மச்சம்.

காலையில் நண்பன் திருமணம்
தவித்த விரகம் தனிமையில்.

                                         - கதை சொல்லி

Tuesday, September 27, 2011

புணர்ச்சி விதிகள் 1

ஓர் இரவில் உன் உந்திசுழி சுழலில் மூழ்கி போனேன்
ஆற்று வெள்ளமென நீ...

என் காதல் இப்படித்தான் அவளின் மௌனமும், எனது பதிலும்
ரயில்பாதை என நானும் அவளும்...

இரை தேடிய பறவையென நான், கொத்தித் தின்ன தானியம்,
செரிச்ச பின்னும் இனிக்குது...
                                                    - கதைசொல்லி..